திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) ஒருவர், மது போதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கலசப்பாக்கம் அடுத்த மசார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடனை வசூலிக்க வந்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர், ஏழுமலையை மிரட்டி, தாக்கிவிட்டு அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கடந்த 20-ஆம் தேதி கடலாடி காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் துறையினர் அதற்குரிய சி.எஸ்.ஆர் (CSR) ரசீது வழங்காமல் அவரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
