கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள். ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவக்கும் விதமாக கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மற்றும் கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பாக தமிழகத்தில் முதன் முறையாக நடைபெற்ற இதில், ஜூனியர், சீனியர் என இரு
பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. . இதில் சென்னை, கோவை,திருப்பூர், மதுரை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற இதன் இறுதி போட்டியில் சென்னை அணி முதல் இடத்தையும், கோவை அணி இரண்டாம் இடத்தையும், திருப்பூர் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் ஜூலை 9ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற உள்ள காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.