குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரும் பிரபல டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இதன் உரிமையாளர் பரக் தேசாய் (49). இவர் கடந்த 15ம் தேதி மாலையில் தன் வீட்டின் அருகில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்களின் கூட்டம் அவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியுள்ளார். ஆனால் எதிர்பாரதவிதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த பரக் தேசாய்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு 7 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தற்போது உள்ள சூழலில் தெருநாய்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் பன் மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்சமயங்களில் மாடுகளினால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த தெரு நாய்களினால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தடுக்க இயலும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.