Skip to content
Home » பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரசு, அரசு உதவி பெறும்; கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் student loginஇல் சென்று ஆதார் எண் அளித்து e-kyc verification செய்ய வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் (scholarship portal) புதியதிற்கு (Fresh) 01.02.2024 முதல் செயல்பாட்டில் உள்ளது. புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும்.

மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!