கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக் கூறி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான உணவை வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் வந்து கல்லூி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
