திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கருமண்டபம், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்,நம்பர் 1 டோல்கேட்,
முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை தந்தது. இருப்பினும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி
சென்றனர். மழையினால் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.