திருச்சியில் இருந்து திண்டுக்கல், தேனி வழியாக கம்பம் செல்லும் அரசு பேருந்தில், பேருந்து வழித்தடத்தை குறிப்பிடும் எல்இடி பெயர் பலகையில் தமிழக வெற்றி கழகம் என ஆங்கிலத்தில் எழுத்துக்கள் மிளிரச்செய்திருந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தெரியாமல்

இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அரசு போக்குவரத்துக் கழகத்தின் இந்த அவல நிலையை எண்ணி மக்கள் வேதனைப்படுகின்றனர்.அதே நேரம் இதுபோன்று செயலில் ஈடுபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

