Skip to content

தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக வயல் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் ஆடு மாடுகள் கூட மேய்க்க முடியவில்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனை தமிழக அரசும் காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பால கங்காதரன் தலைமை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் மணி மாறன் உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!