Skip to content
Home » ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவரது மனைவி பிரித்தீ வினோலியா சுதா (51). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!