Skip to content
Home » கோவில் திருவிழாவில் மகள், மனைவியுடன் முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி..

கோவில் திருவிழாவில் மகள், மனைவியுடன் முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி..

தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. ‘பருத்தி வீரன்’ தொடங்கி ‘விருமன்’ வரை பல கிராமத்து திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். திரைப்படங்களில் மட்டும் வசனம் பேசிவிட்டு செல்லும் ஹீரோ போன்று அல்லாமல் கிராமத்தையும், விவசாயத்தை மிகவும் விரும்புவார்.

karthi

அதனால் தான் கிராமத்து கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் விரும்பி நடித்து வருகிறார். சினிமாவை தவிர நிஜத்திலும் விவசாயம் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

கிராமங்கள் என்றாலே கொள்ளை பிரியம் கொண்ட கார்த்தி, அடிக்கடி தனது சொந்த கிராமத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்ற கார்த்தி, குடும்பத்தினருடன் முளைப்பாரி எடுத்துள்ளார். அப்போது கார்த்தியின் மகள் உமையாளும் முளைப்பாரி எடுத்து வந்த கிராம மக்களை வியப்பில் ஆழ்த்துள்ளார். பொதுவாக கார்த்தியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகாத நிலையில் தற்போது முளைப்பாரி திருவிழாவில் மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!