Skip to content
Home » தஞ்சை அருகே ஆலக்குடி அரசு மே.பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி…

தஞ்சை அருகே ஆலக்குடி அரசு மே.பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி…

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதையடுத்து நேற்று காலை பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்!றுள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 15 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத்தம் 30 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் கூறுகையில், எங்கள் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மொத்தம் 30 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!