Skip to content
Home » தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் சாவர்கின் ராபர்ட். இவரது மனைவி லாவண்யா (39). இவர் நேற்று தஞ்சை ராசாமிராசுதாரர் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவையாறு அந்தணக்குறிச்சியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி ராஜலட்சுமி (29) திடீரென லாவண்யாவிடம் இருந்து ரூ.500-ஐ திருடிக் கொண்டு தப்பியோட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யா சத்தம் போட்டுள்ளார். உடன் அக்கம் பக்கத்தில் நின்றிருந்த பொதுமக்கள் ராஜலட்சுமியை மடக்கி பிடித்து மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!