Skip to content
Home » தஞ்சையில் ஆதரவின்றி கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு….

தஞ்சையில் ஆதரவின்றி கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில்

அனாதரவாக கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக செங்கிப்பட்டி ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த முதியவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த  முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!