Skip to content

8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

தஞ்சாவூர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 8ம் தேதி அன்று முற்பகல் 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு, ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!