Skip to content
Home » தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 24, 25ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இரண்டு நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலைக்கு அரசு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. மேலும், பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதையொட்டி பெரிய கோவில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!