தஞ்சை மனோஜிப்பட்டியை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் மகன் வெங்கடேசன் (24). இவர் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைக்கு தனது பைக்கில் சென்று விட்டு வீரமணி என்பவருடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வண்ணாரப்பேட்டை புது ஆற்றுப்பாலம் பகுதியில் தஞ்சை நோக்கி திரும்பும்போது திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த வேன் வெங்கடேசன் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். பின்னார் அமர்ந்து வந்த வீரமணி படுகாயமடைந்தார்.
தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வெங்கடேசன் தந்தை தேவதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தஞ்சை இருவேறு இடங்களில் நடந்த பைக் திருட்டு சம்பவம்…. போலீஸ் விசாரணை…
இதனை தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த துரைராஜன் என்பவரின் மகன் சீனிவாசன் (33 ). இவர் கடந்த 17ம் தேதி தெற்கு வீதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடை முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் பைக்கை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேற்கு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதேபோல் தஞ்சை கீழவாசலை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் ஆரோக்கிய செபாஸ்டின் ( 40). இவர் கடந்த 28ம் தேதி தனது பைக்கை கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் 29ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய செபாஸ்டின் இதுகுறித்து கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருட்டு போன பைக்கின் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது.