தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம்
தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் நடைபெற உள்ளது, இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொ

ண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார், இதையடுத்து இன்று திருமலை சமுத்திரத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தலைமையில் எம்பி

முரசொலி, எம்எல்ஏக்கள் நீலமேகம், அசோக்குமார், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பந்தகால் நட்டு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்

