தமிழகத்தில் மீண்டும் தமிழக முதல்வர் தலைமையில் 2.0 ஆட்சி மலரும் என உடுமலை சட்டமன்ற வேட்பாளர் ஜெயக்குமார் பேட்டி. பொள்ளாச்சி -மார்ச்-31. தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது அடுத்து திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர் இதை அடுத்து திருப்பூர் தெற்கு மாவட்டம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வஞ்சியபுரம் பகுதியில் திமுக உடுமலை சட்டமன்ற வேட்பாளர் ஜெயக்குமார் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் வேட்பாளர் கூறுகையில் தமிழகத்தில் முதல்வர் தொடர்ந்து நல்ல பல திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வர் 2.0 ஆட்சி அமையும் எனவும் அதிக வாக்கு பெற்று உடுமலை சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றும் என தெரிவித்தார் இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

