திருவரங்கம் கீழ சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் கோபாலச்சாரி (84 ) இவர் தன்னுடைய மகள் வீட்டிலிருந்து திருவனைக்காவல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கடந்த 27ந்தேதி சென்றார்.கோவிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது மகன் மாதவன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

