Skip to content
Home » தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

  • by Senthil

தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று  ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி  சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக(முதல்வராக) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நாளை  தெலங்கானாவின் 2வது முதல்வராக பதவி ஏற்கிறார்.  அவருக்கு கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ரேவந்த் ரெட்டி நேற்று  டில்லி சென்றார். அங்கு காங்கிரஸ்  கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். குறிப்பாக  முன்னாள்  தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!