Skip to content

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு இன்று பாராட்டு விழா, முதல்வா் பங்கேற்பு

இளம் வயதிலேேயே உலக செஸ் சாம்பியன்  பட்டத்தை வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ். அவரது சாதனையை  பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று  விழா நடத்தப்படுகிறது.. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான  விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில்  குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!