Skip to content

டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியது. இதனால், பலர் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் அரசுப்போக்குவரத்துக்கழக இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!