Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது.  அதே போல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரிப்பின் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!