செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் போர்வெல் அமைக்கும் பணியின்போது, 4 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பணியில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பிரபு (22), பாட்ஷா (45), ராஜேந்திரன் (55), பாலாஜி (32) ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போர்வெல் பணியில் ஈடுபட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி பலி-சோகம்
