Skip to content
Home » ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர். அப்போது  லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை பிடித்து கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.    ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இதில் லஞ்சம் வாங்கிய  மாவட்ட அதிகாரி நாகராஜன், உதவி அதிகாரி சின்னதுரை ஆகியோருக்கு தலா  3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி  நீதிபதி  இன்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!