Skip to content
Home » திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Senthil

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது தினமும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

நேற்று துபாயில் இருந்து  வந்த  ஸ்ரீலங்கன் விமானம் இலங்கை வழியாக திருச்சி வந்தது. விமானத்தில் பயணம் செய்த  ஆண் பயணி ஒருவர் சட்ட விரோதமாக தங்க கட்டிகளை கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக  சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் பெண்கள் பயன்படுத்த கூடிய கைப்பையில் மறைத்து 318 கிராம் எடை கொண்ட 5 உருளை வடிவிலான தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரிய

வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 19 லட்சத்து 12 ஆயிரத்து 274 ஆகும் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா ? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா ?  அவர் மீது வேறு வழக்குகள் அவர்கள்  உள்ளதா இவருக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.  ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!