Skip to content
Home » திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் ,நடுவலூரை சேர்ந்தவர் புரவி (50) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக கடந்த 22 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புரவி நேற்று காலை 8 மணிக்கு வேலைக்கு வந்தவர் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தார் அப்போது சிறிது நேரத்தில் கீழே மயங்கி விழுந்து புரவியிடம் எந்தவித அசைவும் இல்லாத நிலையில் புரவியை சக ஊழியர்கள் பெல் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே புரவி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பற்றி பெல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!