Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகைகளை தராமல் திருச்சி வியாபாரியிடம் மோசடி.. 4 பேருக்கு வலை

திருச்சி மாவட்டம் , சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து வருகிறார். இவரது அக்கா மகன் சாதிக் பாஷா இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவர் 150 கிராம் தங்க நகைகளை தனது மாமாவிடம் கொடுக்கும்படி அய்யனார் மற்றும் கவினேஷ் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் கடந்த 4-ந் தேதி அன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தின் மூலம் வந்தனர்.பின்னர் அவர்கள் நகைகளை அவரது மாமாவிடம் கொடுக்காமல் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சீமான் மற்றும் சிங்கப்பாண்டி ஆகியோர்களிடம் கொடுத்து அனுப்பினார். இதில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதர்மைதீன் இது குறித்து விமான நிலைய போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!