Skip to content
Home » மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

திருச்சி மத்திய,  வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழின தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை திருச்சி மத்திய, வடக்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து பகுதிகளில் மாவட்ட கழகம் மற்றும் அனைத்து அணிகளின் சார்பில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடுவது.

நடைபெறவிருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் கழகத்தினர் முழுமையாக பங்கேற்கும் வகையில் அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக சேர்ந்திட விண்ணப்பபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து விரைவில் அந்தந்த சங்கங்களில் ஒப்படைக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களும் வியக்கும் வண்ணம் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை அமுல் படுத்திய தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை எழை, நடுத்தர மகளிர்க்கு மாதம் ரூ.1000 வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் இக்கூட்டம் தனது நன்றியினையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது

இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு வாக்குசாவடி முகாம் வருகிற நவம்பர் மாதம் 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவிருக்கிறது. இம்முகாம்களில் கழகத்தினர் அனைவரும் பங்கேற்று புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!