Skip to content
Home » மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

  • by Senthil

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தண்டபாணி வயது (37) இவர் தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 7.30 மணியளவில் மின் கசிவு காரணமாக திடீரென வீட்டில் தீ பற்றியது கண்ணிமைக்கும் நேரத்தில் மள மளவென தீ பற்றி எரிந்தது. இதன் காரணமாக வீட்டில் இருந்த இரண்டு பீரோக்கள், ஆதார் கார்டுகள், 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மார்க் சீட்டுகள், இரண்டு செல்போன்கள், டிவி, மிக்ஸி கேஸ் அடுப்பு மற்றும் மூன்று சவரன் தங்க நகைகள் தீயில் எரிந்து நாசம் ஆயின

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தண்டபாணி மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!