Skip to content
Home » திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

  • by Senthil

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரில் அலுவலகம் வைத்து பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (46). இவர் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் பிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு ஒடி விட்டது. இந்த சம்பவத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சில நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஒட்டம் பிடித்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஜிஎச் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பிரபு பாமகவில் தொழிற்சங்க நிர்வாகியாக இருந்தவர். மேலும் பிரபு சுமார் 25 ஆண்டுகாலமாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். மேலும் பல ரவுடிகளுடன் தொடர்புயைவர் என்றும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாகவே பிரபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது..

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில்  விசாரணைக்கு ஆஜரானவர்  பிரபு.  இவர்  ஏற்கனவே  ஆஜரான நிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில்  நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். இவருக்கும்

உமாநாத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதனால் கொலை நடந்ததா என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!