Skip to content
Home » திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (19) ராம் (20)ஆனந்த் (22) என்ற மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நக்கசேலம் மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு துறையூர்- பெரம்பலூர் சாலையில் செல்லும் பொழுது எதிர்திசையில் வந்த டேங்கர் லாரி மோதி சம்பவ இடத்தில் இருவர் பலியானார்கள்.

இருவரின் உடல்களும்  பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது ஆனந்த் என்பவருக்கு  108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி  சிகிச்சை  அளிக்கப்பட்டத.  மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆயுத பூஜை நாளில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம்  கோட்டத்தூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!