திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்றவர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற பொன்மலை போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக
திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இங்கு எப்படி வந்தார்? என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.