Skip to content
Home » மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பொன்மலை ஸ்ரீரங்கம் ரயில் வழித்தடத்தில் ஒரு அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசார் மற்றும் பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் போலீசார் வந்து இறந்தவர் யார்? எப்படி இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை செய்தனர் விசாரணையில் அவர் தெற்கு உக்கடை விறகு கடை தெருவை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் கூலித் தொழிலாளியான ஷாஜகான் வயது (37) என்பது தெரிய வந்தது இவருக்கு மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்துள்ளது.

இதனால் இன்று காலை இரண்டு முறை அருகில் இருந்த காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து

தற்கொலை முயற்சி செய்ய செய்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக அவரைப் பிடித்து உறவினர்கள் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். கைகளை அறுத்துக் கொண்டு இன்று காலை 9:45 மணி அளவில் அந்த வழியாக வரும் தேஜஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அரியமங்கலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!