Skip to content
Home » திருச்சி ரயில்வே போலீசாரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது..

திருச்சி ரயில்வே போலீசாரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது..

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் வயது 41 ரயில்வே போலீசாராக உள்ள இவர் தற்பொழுது செந்தண்ணீர் புறத்தில் உள்ள ரயில்வே லோகோ டீசல் செட்டில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று பணி முடிந்து மதியம் 2.30 மணி அளவில் வீடு திரும்பிய பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டுள்ளார். கார்த்திக் பணம் தர மறுத்துள்ளார். உடனடியாக அந்த 3 பர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கார்த்திக் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கத்தி முனையில் பணத்தை பறித்து சென்ற சங்கிலியாண்டபுரம் பாரதியார் நகர் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ரவுடி தினேஷ்குமார் என்கிற குண்டுமணி வயது (28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணத்தையும் கத்தியையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!