Skip to content
Home » திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

திருச்சி , நாமக்கல் சாலையில் உமையாள்புரம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது டயரானது சாலையின் ஓரத்தில் உள்ள மணலில் சிக்கி சற்று சாய்ந்தது. சாய்ந்தபடி இருந்ததால் வாய்க்காலில் விழும் அபாயத்தில் இருந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மணல் லாரியை இயந்திர உதவியுடன் மீட்கப்பட்டது.  அதன் பின்னர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். வாகனத்தை மீட்ட போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.  இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!