Skip to content
Home » அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மற்றும் அசூர் பகுதியில் உள்ள அஞ்சலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் 100 நாள் வேலை அட்டையில் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான முறையை (ABPS) உடனடியாக திரும்ப பெற வேண்டும் . அட்டை பெற்றுள்ள அனைத்து ஊராட்சி ஜாப் கார்டு பெற்ற அனைவருக்கும் 200 நாள் வேலையும் 600ரூ கூலியும் வழங்கிட வேண்டும் ஊரக வேலை சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திருத்துவதை கைவிட வேண்டும். நெல் சாகுபடி செய்து இன்சூரன்ஸ் செய்த மற்றும் செய்யத்தவறிய அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் 100 நாள் வேலை பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!