Skip to content
Home » திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் கத்தி முனையில் இவரை மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக அருண்பிரசாத், ராஜேஷ் கண்ணன் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடமிருந்து பணம் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!