Skip to content
Home » திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள்,
கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக

கொண்டாடப்பட்டது – இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு மண்பானையில் சமைத்து கொண்டு இருந்த பொங்கலில் இனிப்பு,நெய்யை சேர்த்து கிண்டினார் – பொங்கலோ பொங்கல் என்கிற கிராமிய வார்த்தைகளை கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை அமைச்சர் தெரிவித்து கொண்டார். இதற்கு அடுத்தபடியாக உரியடிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பானையில் கட்டி இருந்த பூவை தட்டி விட்டார் – அமைச்சருக்கு பின்பாக களத்தில் இறங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஒரே அடியில் பானையை உடைத்து சுற்றி இருந்தவர்களுக்கு உற்சாகம் மூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!