திருச்சி நேரு தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (59 ) .இவர் அந்த பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் கோனி சாக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.6000 பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து திருச்சி இ.பி.சாலை அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த வீரவேல் (19) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
