Skip to content
Home » திருச்சியில் 26 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கல் உணவகத்திற்கு சீல்……

திருச்சியில் 26 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கல் உணவகத்திற்கு சீல்……

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் பகுதியில் உள்ள உணவகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல் மற்றும் மகாதேவன் உள்ளிட்டோா் நேற்று மேற்கொண்ட சோதனையில், சுமாா் 26 கிலோ புகையிலைப் போதைப் பொருகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்,
இது தொடா்பாக 3 பேரைப் பிடித்து சிறுகனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் அந்த உணவகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!