மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இரு அதிர்வுகளும் 3.4 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட தகவல் அலுவலகத்தின்படி, முதல் நில அதிர்வு திங்கள்கிழமை இரவு 10.04 மணிக்கும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது அதிர்வு இரவு 11 மணிக்கும் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வுகளால் உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
