Skip to content
Home » டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

  • by Senthil

திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின் அருகிலேயே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கருணாகரன் தனது காரில் மேலப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார் அப்போது இரு சக்கர வாகனத்தில் குடியாத்தம் கீழ சுப்பராயன்பட்டியை சேர்ந்த பிரசாத் அவரது நண்பர்கள் வீரப்பன் என்கிற வீரபாகு மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவி உட்பட 3 பேரும் காரை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது கருணாகரனுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரம் தீராத பிரசாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் வீரப்பன் என்கிற வீரபாகு, கவி, சம்பத்குமார் மற்றும் கொடியால மேல சுப்பராயன்பட்டியை சேர்ந்த சிவா என்கிற சிவனேசன் அதே பகுதியை சேர்ந்த பூபதி ஆகியோருடன் கருணாகரனின் கடைக்கு வந்து கத்தி மற்றும் குத்து கோலால் ராஜா மற்றும் அவரது அண்ணன் கருணாகரனை குத்தி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் இருவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரபாகுவின் ஆறுமுகம் என்பவர் தனது மகன் மற்றும் கூட்டாளிகளை தாக்கியதாக காயம் பட்ட அண்ணன் தம்பி மீது புகார் அளித்துள்ளார் இரண்டு புகார்களையும் தனித்தனியாக பெற்றுக் கொண்ட சோமரசம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!