மதிமுக தலைவர் வைகோ, தவெக பக்கம் சென்றபோதே அக்கட்சியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக சிந்தனையாளர் திண்டுக்கல் லியோனி சாடியுள்ளார். தவெக தலைவர் விஜய், அவரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக்கூட நேரில் செல்லவில்லை என குறிப்பிட்ட அவர், இன்னும் 3 மாதங்களில் அவர் தனுஷின் கட்சியில் சென்று அடைக்கலமாவார் என்றும் விமர்சித்துள்ளார். வைகோவின் சிறந்த பேச்சிற்கு தான் ரசிகர் என்ற போதிலும், அவரது அரசியல் முடிவுகள் மற்றும் நகர்வுகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
