Skip to content

வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம்,உதயநத்தம் ஊராட்சி,
15 – து நிதிக்குழு மானியம் 2023 – 2024 திட்டத்தின் கீழ், 1).கண்டியங்கொல்லையில், 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூபாய் 8.57 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், 2).கோடாலி கலனி மெயின் ரோட்டில், கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ரூபாய் 3.00 இலட்ம் மதிப்பீட்டில் அமைத்தல்,
3). தினக்குடி மெயின் ரோட்டில், கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ரூபாய் 3.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல்,
ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன் (வட்டார ஊராட்சி), பொய்யாமொழி (கிராம ஊராட்சி),

ஊராட்சிமன்ற தலைவர் மல்லிகா வீரப்பன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சுகன்யா செந்தில்குமார்,தமிழ்செல்வன்,பாலசுப்பிரமணியன்,மாவட்ட பிரதிநிதி கோவி.சீனிவாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கே.எஸ்.ஆர்.கார்த்திக்கேயன், வெ.பாலசுப்ரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!