Skip to content
Home » வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (65) தனது மொபட்டில் வல்லம் – ஒரத்தநாடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேங்கராயன்குடிகாடு பிரிவு சாலையில் நாகராஜ் தனது மொபட்டில் திரும்பியுள்ளார்.

அப்போது பின்னால் ஆலத்தூர் மேற்கு தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முத்தரசன் (38) ஓட்டி வந்த கார் நாகராஜ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!