செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
