திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் இன்று வழங்கினார்.
கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்பின்னர் காந்தி மார்க்கெட், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் நின்றபடி, சாலைவலமாக விஜய் வருகை தந்தார். வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, பாலக்கரையில் இருந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதிக்குச் செல்லும் விஜய், வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

