Skip to content
Home » விஜயகாந்த் மறைவு… எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு… எம்பி கனிமொழி…

விஜயகாந்த் மறைவு… எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு… எம்பி கனிமொழி…

  • by Senthil

எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் நடிகர் விஜயகாந்த் என கனிமொழி எம்பி புகழாரம் சூட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நடிகர் விஜயகாந்த் மறைவு என்பது தமிழக அரசியலுக்கு மட்டுமில்லாமல் அவரைத் தெரிந்த எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு. எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் அவர். எப்பொழுதும் மக்கள் மீதும் எளியவர்கள் மீதும் அக்கறை கொண்டவர். ஒரு காலகட்டத்தில் உதவியவர்களை மறக்காமல் அவர்களோடு என்றும் இருக்கக்கூடியவர் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த். திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கூட தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மக்கள் மீது வைத்திருக்கக் கூடிய அன்பு இதைச் சுற்றித்தான் அவரது திரைப்படமும் இதையே மைய கருத்தாக கொண்டு இருந்தது.

அவருடைய வாழ்க்கையும் தமிழ் இனம் என்பதைத்தான் பற்றி கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், அவரை நாம் இன்று இழந்து இருக்கிறோம். அவரோடு பழகக் கூடிய வாய்ப்பு எங்கள் குடும்பத்தாரோடு பல சந்தர்ப்பங்களில் இருந்திருக்கிறது. தலைவர் மீதும் எனது தாயார் மீதும் பற்று வைத்திருக்க கூடிய நல்ல மனிதர். அவருடைய இழப்பு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பாகும், வேலை தேடி வரக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் தன்னுடைய அலுவலகத்திலேயே 75 பேருக்கு ஒரு நிமிடத்தில் வேலை கொடுக்கக்கூடிய அவ்வளவு இளகிய மனதிற்கு சொந்தக்காரர். அவரது இழப்பு என்பது அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் நேரடியாக தான் இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!