Skip to content
Home » விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வரமுடியாத பல பிரபலங்களும் தேமுதிக அலுவலத்தில் அவரது நினைவிடத்திற்கு வந்து, நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்லிச் சென்றனர். நடிகர் விஜயாகாந்த் மறைவை ஒட்டி அவரது பெயரைச் சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், கீழ் மனம்பேடு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், கேப்டன் விஜயகாந்த் தெரு எனப்பெயர் வைத்துள்ளனர். மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் அவர்கள் மரியாதை செய்துள்ளனர். கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலைப் பாராட்டி, இந்த புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!